Thursday, March 25, 2010

என்னை பார் யோகம் வரும் !!!

எங்கோ ஒலிக்கும் குரல்கள் :



7 கழுதை வயசாகிறது, உன்னால ...

இந்தக் கழுதையை கட்டி அழ முடியலே ...

கழுதை! கழுதை! கற்பூர வாசனை உனக்கு தெரியுமா!

சரியான சோம்பேறிக் கழுதை

நீயெல்லாம் கழுதை மாதிரி பொதி சுமக்கத்தான் லாயக்கு !!!


இப்படியெல்லாம் ஒலிக்க விட்டம் பார்த்தபடி கழுதையை பற்றி நினைக்கையில்

வாசலில் உள்ள வாசகம்

என்னை பார் யோகம் வரும் - கம்பீரமும் இல்லாமல் கூனியும் இல்லாமல்

இந்த மனித பிறவியை எண்ணி, கவலை தோய்ந்த முகத்துடன் - கழுதை!!!

Wednesday, March 3, 2010

பூக்களைப் பறிக்காதீர்கள் ...

சூரியனை அதிகம் நேசித்த நான்


இன்று நட்சத்திரங்களாக எத்தனிக்கிறேன்

நிலவே உன்னுடன் வானூர்வலம் செல்ல !



பூக்கள் மீது அதிகம் காதல் கொண்டவன் நன்

இன்று முட்களை நேசிக்கிறேன்

ரோஜாவே உனக்கு காவலாக !



எத்தனைக் காலம் ?


உன்னைப் பறித்து என்னிடமிருந்து பிரித்தவர்கள்


ஊற்றி வளர்த்தவர்களா... ? ஊரான் வீட்டவர்களா ...?

கண்ணீர் உனக்காக

நீ பிரியும் பொழுது

ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விட மாட்டேன் !



என் கண்ணீர் உன்னை

காயப்படுத்தி விடும் என்பதற்காக அல்ல !



இனி உனக்காக அழுவதற்கு

என்னிடம் கண்ணீர் கூட இல்லை...

Friday, February 26, 2010

அப்பா குழந்தையாகிவிட்டார் !

சின்ன வயதில் தெருவில் விளையாடும்போது


அப்பாவின் ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் வீட்டிற்கு ஓடுவேன்

படிப்பது போல் நடிக்க அல்ல

அவர் வாங்கி வரும் பதார்த்தங்களை ருசிக்க

சுற்றுலாவெல்லாம் செல்ல வேண்டாம் என அம்மா கூறும்போதும்

சென்று வா மகனே என்று கூறியவர்

வேலைக்கு சென்ற புதிதில் கை செலவிற்கு நான் அனுப்புகிறேன்

நன்றாய் இரு என்று வழியனுப்பியவர்



இன்று என் ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் வாசல் வந்து வரவேற்கிறார்

அந்த லட்சுமி விலாசில் பகோடா வாங்கி வந்தாய என்று கேட்டு...

நான் அப்பாவாகினேன் அவர் குழந்தையாகிவிட்டார் !

3 பொய்கள்

உன்னை பார்த்து 3 பொய்கள் சொல்ல வேண்டும் :

நீ அழகு !
நீ மட்டுமே அழகு !
உன்னை விட அழகு யாருமில்லை !

மனிதன் என்பவன்...


கவிதை எழுதினால்தானே கவிஞன் !
காவியம் படைத்தால்தனே கலைஞன் !

அது போல

மனிதாபிமானம் கொண்டால்தானே மனிதன் !