சின்ன வயதில் தெருவில் விளையாடும்போது
அப்பாவின் ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் வீட்டிற்கு ஓடுவேன்
படிப்பது போல் நடிக்க அல்ல
அவர் வாங்கி வரும் பதார்த்தங்களை ருசிக்க
சுற்றுலாவெல்லாம் செல்ல வேண்டாம் என அம்மா கூறும்போதும்
சென்று வா மகனே என்று கூறியவர்
வேலைக்கு சென்ற புதிதில் கை செலவிற்கு நான் அனுப்புகிறேன்
நன்றாய் இரு என்று வழியனுப்பியவர்
இன்று என் ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் வாசல் வந்து வரவேற்கிறார்
அந்த லட்சுமி விலாசில் பகோடா வாங்கி வந்தாய என்று கேட்டு...
நான் அப்பாவாகினேன் அவர் குழந்தையாகிவிட்டார் !
Friday, February 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment